பரபரப்பு… இன்போசிஸ் நாராயணமூர்த்தி மனைவிக்கு மர்மநபர் செல்போன் மூலம் மிரட்டல்

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்திக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவரது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு தொலைபேசியில் மர்மநபர் மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி காலை 9.40 மணிக்கு சுதா மூர்த்திக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தான் ஒரு மத்திய தொலைத்தொடர்பு ஊழியர் என்றும், சுதா மூர்த்தியின் செல்போன் எண், ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் அந்த எண்ணில் இருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதா மூர்த்தியன் செல்போன் எண்ணுக்கு வரும் அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாக தொலைபேசியில் அந்த மர்மநபர் மிரட்டியுள்ளார் அந்த நபரின் செல்போன் எண்ணை, ட்ரூகாலரில் சரிபார்த்தபோது, அதில் தொலைத்தொடர்புத் துறை என்று தோன்றியுள்ளது. ஆனாலும் அந்த மர்மநபரின் பேச்சால் சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸில் செப்டம்பர் 20-ம் தேதி சுதா மூர்த்தி புகார் அளித்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

பதை பதைக்க வைத்த ஃபேஸ்புக் நேரலை …. மனைவியைக் கொலை செய்ததாக கணவன் பேட்டி

கேரளாவில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கூத்தாநடியைச் சேர்ந்தவர் ஐசக்(42). இவரது மனைவி ஷாலினி(39). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக…

அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *