ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்​திய அரசின் அறி​விப்​பின்​படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்​தது. இதன்​படி, இனி 5 சதவீதம் மற்​றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். ஏற்​கெனவே 28 சதவீத வரி விதிப்​பின் கீழ் இருந்த 90 சதவீத பொருட்​கள் 18 சதவீத வரி விகிதத்​தின் கீழ் மாற்றப்​பட்​டுள்​ளன. இதனால், உணவுப் பொருட்​கள், வாக​னங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள் உட்பட 375 பொருட்​களின் விலை கணிச​மாகக் குறைந்​துள்​ளது.

நெய், பன்னீர், வெண்​ணெய், ஜாம், உலர் பழங்​கள், காபி மற்​றும் ஐஸ் கிரீம் உள்​ளிட்ட பொருட்​கள் விலை குறைந்​துள்​ளது. இது​போல, டி.​வி., ஏ.சி., வாஷிங் மெஷின் உள்​ளிட்ட வீட்டு உபயோக பொருட்​களின் விலை​யும் குறைந்​துள்​ளது. பெரும்​பாலான மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைந்​துள்ள​தால் அவற்​றின் விலைகளும் கணிச​மாக குறைந்​துள்​ளது. சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்​துள்​ள​தால் வீடு கட்​டு​வோர் பயனடை​வார்​கள்.

வாக​னங்​களுக்​கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், புதி​தாக வாக​னம் வாங்​கு​வோர் அதிக அளவில் பயனடை​வார்​கள். உடற்​ப​யிற்சி மையங்​கள், முடி திருத்​தும் நிலை​யங்​கள், யோகா பயிற்சி மையங்​கள் உள்​ளிட்ட சேவைத் துறைக்​கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. சோப்​பு, ஷாம்​பு, டூத்​பிரஷ், டூத்​பேஸ்ட், ஷேவிங் கிரீம், டால்​கம் பவுடர் உள்​ளிட்​ட​வற்​றுக்​கான ஜிஎஸ்டி 12 மற்​றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீமாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. இதனால் பொது​மக்​களின் நுகர்​பொருள் செலவு கணிச​மாக குறை​யும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

இதனிடையே ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு…

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *