வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்டம்பர் 18)  தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் என்று மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன் பெற்று வருகின்றன. இப்பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து  வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி தண்ணீரை திறந்து வைத்தார். தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், கேஜே.பிரவீன்குமார், செ.சரவணன், தேனி எம்பி.தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி திறக்கப்பட்டது. இதே அளவு 45 நாட்களுக்கும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கனஅடிநீர் திறக்கப்பட உள்ளது.

இன்று வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட 53 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 5ஆயிரத்து 697 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 811 ஏக்கர் நிலங்களும், மேலூர் வட்டத்துக்கு உட்ட 48 ஆயிரத்து 963 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 478 ஏக்கர்நிலங்களும் பயன்பெறும்.

அதே போல சிவகங்கை வட்டத்துக்கு உட்ட 5 ஆயிரத்து 561 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு ட்பட்ட 146 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 982 ஏக்கர் நிலங்களும், பேரையூர் வட்டத்துக்கு உட்பட்ட 387 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற உள்ளன. நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற அமைச்சர் பெ.மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts

விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *