பாய்ந்தது குண்டர் சட்டம்… ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு சிறையில் அடைப்பு

புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி சென்னை காவல்துறை தலைவர் அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்தி மீது சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தியும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக இரு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு  குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *