சென்னையில் சபரீசன் தந்தை வேதமூர்த்தி காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சபரீசனின் தந்தை வேதமூர்த்தி வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் வேதமூர்த்தி காலமானார்.

சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேதமூர்த்தியின் இறுதி சடங்குகள் நாளை (செப்டம்பர் 12) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை மறைவைத் தொடர்ந்து, மகன் சபரீசன், ஆஸ்திரியா நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *