கொடைக்கானலில் கொட்டித் தீர்க்கும் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை!

கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

பாமகவில் இருந்து அன்புமணி அதிரடியாக நீக்கம்- ராமதாஸ் அறிவிப்பு!

பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி…

சென்னையில் சபரீசன் தந்தை வேதமூர்த்தி காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன் மற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *