அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது திமுக தான். திமுகவின் தூண்டுதலில் தான் அனைத்துப் பிரச்னைகளும் இங்கு நடக்கின்றன. செங்கோட்டையனை பாஜகவினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதைத்தான் கேட்டனர் என்றார். செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது- தவெக தலைவர் விஜய் தடாலடி!

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *