அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள பார்வுட் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்சுதீன்(55), செல்லதுரை(48) ஆகியோர் இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை சம்சுதீனை துரத்திச் சென்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார். மேலும் காட்டுயானை தாக்கியதில் செல்லதுரை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக செல்லதுரையை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்சுதீன் உடல், பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தேயிலை தோட்டத்திற்குள் சுற்றித் திரியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளி காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *