உஷார்…. மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்புள்ளது; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *