உஷார்…. மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்புள்ளது; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *