அதிமுகவில் சுனாமி வந்த போதே நிலையாக இருந்தவர்- செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் சான்றிதழ் !

மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கிய நாளிலிருந்து இயக்கத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, கட்சியை வளர்க்க உதவியவர்.

அதிமுக பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

  • Related Posts

    மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரா? – இபிஎஸ் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம்

    மதுரை விமான நிலையத்திற்கு பெயர் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என தமிழ்நாடு…

    வைகோ செய்தது ஜனநாயக படுகொலை- மல்லை சத்யா கொந்தளிப்பு

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தது ஜனநாயகப் படுகொலை என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார் மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மல்லை சத்யாவை நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *