அதிமுக முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்- புதுக்கோட்டையில் பரபரப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சரான விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இந்த வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதே போல ராஜேஸ்வரி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மிரட்டல்கள் குறித்து இலுப்பூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள தனியார் பள்ளிக்கும் சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மெயிலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பள்ளியிலும், அதன் பிறகு 20 நிமிடங்களில் திருச்சி நீதிமன்றம் மற்றும் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Posts

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்- செங்கலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மது குடிக்கப் பணம் தர மறுத்த தந்தையின் தலையில் செங்கலை கொண்டு தாக்கி 19 வயது வாலிபன் கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம்(43). இவரது மகன் உதய்(19). இவருக்கும்,…

பரபரப்பு… ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி

தமிழக டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை கத்தியால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி கடுமையாக விமர்சனம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *