நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதைந்தது- 1,000பேரும் சமாதியான சோகம்

சூடானில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் விடுதலை இயக்கம், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். வடக்கு டார்பூரி நடந்த வன்முறையில் இருந்து தப்பித்த குடும்பங்கள் உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், மர்ரா மலையில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து அங்கு சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வந்தது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இந்த பேரழிவில் இருந்து ஒருவர் உயிர் தப்பியதாக சூடான் விடுதலை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடல்களை மீட்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அவசர உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகளாவிய நிவாரண நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி…

நள்ளிரவில் பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து- 15 பேர் உயிரிழப்பு!

கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *