நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதைந்தது- 1,000பேரும் சமாதியான சோகம்

சூடானில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் விடுதலை இயக்கம், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். வடக்கு டார்பூரி நடந்த வன்முறையில் இருந்து தப்பித்த குடும்பங்கள் உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், மர்ரா மலையில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து அங்கு சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வந்தது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இந்த பேரழிவில் இருந்து ஒருவர் உயிர் தப்பியதாக சூடான் விடுதலை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடல்களை மீட்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அவசர உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகளாவிய நிவாரண நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *