விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட 312 விநாயகர் சிலைகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக நீர் நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்காசி, செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் நேற்று கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 85 விநாயகர் சிலைகளானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் இன்று கரைக்கப்பட உள்ளது. இதனிடையே புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் .29) பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் மாதத்தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *