தமிழகத்திற்கு செப்.2-ம் தேதி வருகிறார் குடியரசு தலைவர்!

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்.2-ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தலைவராக உள்ள திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் செப்.2-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.  இதனைத் தொடர்ந்து  செப்.3-ம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *