
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி விழா செப்டம்பர்: 5-ம்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளாக இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாதுன் நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். மேலும் ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
இந்த நிலையில், மிலாடி நபி விழா செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வருகிற 5-ம் தேதியான வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.