சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக முதன்மையான நகரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகருக்கு இன்று வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று சென்னை நகரத்தின் நிறுவன நாளைக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சென்னைப் பகுதியில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவியது, இது சென்னையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் வரலாற்றைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், நடைபயணங்கள், மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

சென்னை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *