ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை- நண்பர் உள்பட மூவர் தலைமறைவு

இளைஞரை மர்மக்கும்பல் ஒன்று  ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம், முசாபார்பூரின் அஹியாபூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நபிபூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரோஹித் குமார்(21). இவர் வீட்டின் அருகே சென்ற போது மர்மக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அவர்களிடம் தப்பிக்க நினைத்த அவரை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் ரோஹித் குமார் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரோஹித் குமாரை மீட்டு பைரியாவில் உள்ள மா ஜான்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பழைய பகை காரணமாக ரோஹித் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அபிஷேக் என்பவர் ரோஹித்தின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். கோயில் திருவிழாவில் சாமி கும்பிடுவதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக அபிஷேக் குடும்பத்தினர் மீது ரோஹித் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து ரோஹித் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலை காரணமாக கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *