முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி – புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

மதுரை பாரபத்தியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். கடும் வெயிலால்  பலர் மயங்கி விழுந்தனர். இந்த நிலையில், மாநாட்டு மேடைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு கட்சி தலைவர் நடிகர் விஜய் மேடைக்கு வந்தார்.  தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சத்தமில்லாமல் சாதித்து கோடிக்கான தாய்மார்களின் அன்பை பெற்ற விஜய், விஜய் தொடங்கியிருப்பது கட்சி இல்லை.., புரட்சி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி. அதற்கு வரும் நாள்களில் தவெகவினர் வியர்வை சிந்தி கடுமையாக உழைக்க வேண்டும். இது பாசத்திற்குக் கட்டுப்படும் ராணுவப்படை என்றார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *