முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி – புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

மதுரை பாரபத்தியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். கடும் வெயிலால்  பலர் மயங்கி விழுந்தனர். இந்த நிலையில், மாநாட்டு மேடைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு கட்சி தலைவர் நடிகர் விஜய் மேடைக்கு வந்தார்.  தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சத்தமில்லாமல் சாதித்து கோடிக்கான தாய்மார்களின் அன்பை பெற்ற விஜய், விஜய் தொடங்கியிருப்பது கட்சி இல்லை.., புரட்சி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி. அதற்கு வரும் நாள்களில் தவெகவினர் வியர்வை சிந்தி கடுமையாக உழைக்க வேண்டும். இது பாசத்திற்குக் கட்டுப்படும் ராணுவப்படை என்றார்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *