
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
“சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிவீர பாண்டியன் மாநில நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முத்தரசி ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 57 துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.